பொது காலத்தின் 3-ம் ஞாயிறு
இறையேசுவின் நண்பர்களே! பொது காலத்தின் 3-ம் ஞாயிற்றுக் கிழமையில் வாழ்த்துக்களுடன் வரவேற்கின்றோம். 'ஆண்டவரின் ஆவி என்மேல் ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்' என்று தொடங்கும் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளை வாசித்து இயேசு தனது பணியை தெளிவாக எடுத்துரைக்கின்றார். மேலும் நம்மையும் அத்தகைய பணி செய்ய அழைப்புவிடுக்கின்றார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்> சிறைப்பட்டோருக்கு விடுதலை அளிக்கவும்> ஒடுக்கப்பட்டோரை அன்பு செய்யவும் அழைப்புவிடுக்கின்றார்.
ஆண்டவரின் ஆவியானவரோடு> ஆண்டவரின் வார்த்தையை ஒன்றாக்கி ஏழை> எளியோர் புதுவாழ்வு பெற நம்மால் முடிந்தவற்றை செய்வோம். ஏனெனில் ஏழைகள் நிறைவாழ்வு பொறும் போது இறையாட்சி முழுமை பெறுகிறது> என்ற உன்னத உணர்வுடன் இன்றைய திருப்பலியில் நாம் நம்மை பலியாக்குவோம். இறையாட்சி நம் மத்தியில் மலரும்.
முதல் வாசக முன்னுரை:
குடும்பங்களில்> நமது அன்பியங்களில்> குழுவாகவும்> தனியாகவும் நாம் இறைவார்தைக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்> நாம் இறைவார்தையை எப்படி வாசிக்க வேண்டும் என்று கூறுகின்ற முதல் வாசகத்திற்கு செவிகொடுப்போம் அதை நம் வாழ்வாக்குவோம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
1. மனித உருவெடுத்த இறைவா!
எங்கள் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை> ஆயர்கள்> குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவரையும் ஆசீர்வதித்தருளும். இவர்கள் அனைவரும் நீர் விட்டுச்சென்ற மதிப்பீடுகளைப் பின்பற்றி அதற்கேற்ப மக்களை வழிநடத்த வேண்டுமென்று மனித உருவேடுத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. குழந்தை மனம் கொண்ட எம் இறைவா!
சாலையோரச் சிறார்களுக்காக> அனாதைகள்> குழந்தைத்தொழிலாளர்கள் இவர்களுக்காக சிறப்பாக வேண்டுகின்றோம். இவர்கள் அனைவருக்கும் நல்ல உடல்> உள்ள சுகத்தை கொடுத்து> இவர்களுக்கு தேவையான உதவிகள் பல செய்து இவர்கள் நிலையை உயர்த்திட வேண்டுமென்றும் குழந்தை மனம் கொண்ட எம் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நல்ல தலைவனே எம் இறைவா!
எம் ஊரை> மாநிலத்தை> நாட்டை வழிநடத்தும் அரசியல் தலைவர்கள்> இங்கே குழுமியுள்ள எம் குடும்பத்தினர் அனைவருக்காகவும் குறிப்பாக எங்கள் குடும்பத் தலைவர்கள் தலைவிகளுக்காக உம்மை மன்றாடுகின்றோம். இவர்கள் அனைவரும் தன்னலம் கருதாது தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களையும்> தங்கள் குழந்தைகளையும் நல்ல குடிமக்களாகவும்> கிறித்தவ முறைப்படியும் வழிநடத்தவும்; நல்ல தலைவனே எம் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. இறையாட்சியின் நட்சத்திரமே எம் இறைவா!
எம் ஊரில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்காக வேண்டி மன்றாடுகின்றோம். இவர்கள் அனைவரும் இணைந்து நீர் கண்ட இறையாட்சிக் கனவினை நனவாக்கவும்> தேவையற்ற உலக நாட்டங்களில் ஈடுபாடு காட்டாமல் உம்மைச் சார்ந்த விஷயங்களில் ஆக்கபூர்வமான செயல்களில் ஆர்வம் காட்டி வாழவும்> சமூக அன்பர்களாய் மாறி> வாழ வரம் வேண்டி இறையாட்சியின் நட்சத்திரமே எம் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. தாயும் தந்தையுமான எம் இறைவா!
இங்கே குழுமியுள்ள ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்காகவும், இங்கே வரஇயலாதவர்களுக்காகவும் மற்றும் இங்கே வரமனமில்லாதவர்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். நல்ல ஆயர்களாக> நாங்கள் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்ற மனநிலையோடு ஒரே மந்தையில் என்றுமே வாழ வரமருள வேண்டுமென்று தாயும் தந்தையுமான எம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment